![](admin/uploads/.60463f47852196.49657407.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுக்கோட்டை: புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே, புதிதாகத் தொடங்கப்பட்ட பூங்காவில், இலவச வை-பை வசதியை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தார்.
அம்ருத் திட்டத்தின்கீழ், சுமார் 80 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட சத்தியமூர்த்தி பூங்கா, கடந்த சில வாரங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. இங்கு நிறுவப்பட்டுள்ள விளையாட்டு உபகரணங்கள், செயற்கை நீருற்றுகள் மற்றும் ஆப்பிள், கத்தரிக்காய், தர்பூசணி போன்று அமைக்கப்பட்டுள்ள பொம்மைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.
இந்நிலையில் பூங்காவிற்கு வருபவர்களுக்கு பயன்படும் வகையில், நகராட்சி சார்பில் இலவச வை-பை வசதியை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தார்.