Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தேர்தல் விவகாரத்தில் தலையிட மாட்டோம்: நீதிபதிகள் கருத்து

டிசம்பர் 03, 2019 09:31

சென்னை: தமிழக அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிடாது என நீதிபதிகள் கூறியுள்ளனர். தமிழகத்தில்  உள்ளாட்சி தேர்தல் நடத்துவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளை முழு வீச்சில் செயல்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் மேயர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தப்படும் என அதிமுக அரசு அறிவித்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் பலத்த  எதிர்ப்புகளை தெரிவித்தன. இதுகுறித்து கருத்து தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ’இது அதிமுக அரசின் சர்வாதிகார  போக்கை காட்டுகிறது’ என குற்றம் சாட்டினார். ஆனால் அதிமுகவோ ஏற்கனவே முன்னர் நடைமுறையில் இருந்த ஒரு முறையைதான்  மீண்டும் கொண்டு வந்திருப்பதாகவும், இந்த மறைமுக தேர்தல் முறையை கொண்டு வந்ததே ஸ்டாலின்தான் எனவும் தெரிவித்தனர்.

இந்நிலையில் அதிமுக அரசு தேர்தலுக்கான பணிகளை சரியாக செய்யவில்லை எனவும், மறைமுக தேர்தலுக்கு எதிராகவும் பேசிவந்த நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ”தேர்தலை மறைமுகமாக நடத்துவது என்பது  அரசின் கொள்கை முடிவு. அதில் நீதிமன்றம் தலையிடமுடியாது” என்று கூறியுள்ளனர்.

தலைப்புச்செய்திகள்