Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உள்ளாட்சித் தேர்தல்: 2 மணிக்குள் விளக்கம் தேவை- உச்சநீதிமன்றம்

டிசம்பர் 05, 2019 09:33

புதுடெல்லி: திமுக உட்பட 12 பேரின் மனுக்கள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ​​திமுகவின் சார்பில் அபிஷேக் சிங்வி வாதாடி வருகிறார். திமுக உட்பட 12 பேரின் மனுக்கள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. திமுகவின் சார்பில் அபிஷேக் சிங்வி வாதாடி வருகிறார்.

மேலும், விசாரணையை நேரில் பார்வையிட தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் உச்சநீதிமன்றத்திற்கு சென்றுள்ளார். மனு மீதான விசாரணையின் போது, நீதிபதிகள் தேர்தல் ஆணையத்துக்கும் தமிழக அரசுக்கும் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.

# மாவட்டங்கள் பிரிக்கப்பட்டால், மறுவரையறை செய்ய மாட்டீர்களா?

# எல்லைகள் மாறும் என்று தெரியும்தானே? பிறகெப்படி மறுவரையறை செய்யாமல் தேர்தல் அறிவித்தீர்கள்?

என்று கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், சட்டம் சொல்வதை மதித்து நடக்க தமிழக அரசுக்கு வலியுறுத்தினர்.

தேர்தலை தள்ளி வைக்கலாம் என்ற வாதத்துக்கு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தபின் , எந்த நீதிமன்றத்தாலும் தேர்தலை தள்ளி வைக்க முடியாது என்று தமிழக அரசு தரப்பில் பதில் வாதம் வைக்கப்பட்டது.

மேலும் இந்த வாதத்தின் போது, 9 மாவட்டங்களில் மட்டும் தேர்தலை தள்ளி வைக்கலாம் என்று தமிழக அரசு தரப்பில் யோசனை தெரிவிக்கப்பட்டது.

இதற்கு திமுக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 9 மாவட்டங்களில் மட்டும் தேர்தலை தள்ளி வைக்க முடியுமா என்ற கேள்விக்கு இன்று மதியம் 2 மணிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதற்குள் பதிலளிக்காவிட்டால், தேர்தலுக்கான அறிவிப்பாணையையே நிறுத்தி வைக்கவும் நீதிமன்றத்துக்கு அதிகாரம் உண்டு என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அடுத்தபடியாக, ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளுக்கு ஒரேயடியாக தேர்தல் நடத்துவது குறித்த வாதமும் முன்வைக்கப்பட்டது. இப்படி தனித்தனியே நடத்துவதும் சட்டவிரோதமானதுதான் என்றும் திமுக தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

இதுகுறித்தும் விளக்கம் அளிக்க தமிழக அரசுமற்றும் தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பிற்பகல் நடைபெறும் வாதங்களைப் பொறுத்து தேர்தல் நடக்குமா இல்லையா என்பது தெரியவரும்.

தலைப்புச்செய்திகள்