![](admin/uploads/.60d8005a213d20.02925654.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கோவை: கோவை மாவட்டம் துடியலூர் அருகே பன்னீர்மடை - கணுவாய் சாலையில், காட்டன் மில்களுக்கு தேவையான உபகரணம் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு இன்று(டிச.,7) அதிகாலை ஒரு மணியளவில் தீவிபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்த கோவை வடக்கு தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதில், லட்சகணக்கான மதிப்பு பொருட்கள் எரிந்து சாம்பலாகியது. இது குறித்து உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் தடாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.