Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

செக் மோசடி வழக்கில் அ.ம.மு.க., நகர செயலருக்கு ஓராண்டு சிறை

டிசம்பர் 10, 2019 08:51

பெரம்பலுார்: பெரம்பலுார் சங்குப்பேட்டை அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் முத்துசாமி,60. இவருக்கும், திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த, அ.ம.மு.க., நகர செயலரான ராஜேந்திரனுக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் இருந்துள்ளது. கடந்த ஆண்டு தொழில் ரீதியாக ராஜேந்திரன் ரூ. 5 லட்சம் முத்துசாமியிடம் கடன் வாங்கி, பின் ரூ. 5 லட்சத்துக்கு மூன்று 'செக்' ராஜேந்திரன் வழங்கினார்.

அந்த செக் வங்கியில் செலுத்தியபோது அவரது கணக்கில் போதுமான பணம் இல்லை. இது குறித்து பெரம்பலுார் குற்றவியல் நீதிமன்றத்தில் முத்துச்சாமி வழக்கு தொடர்ந்தார். விசாரித்த நீதிபதி அசோக் பிரசாத், ராஜேந்திரனுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 10 லட்சம் நீதிமன்றத்தில் செலுத்தவேண்டும், தவறும்பட்சத்தில் மேலும் 6 மாதம் சிறை தண்டனை என தீர்ப்பளித்தார்.

தலைப்புச்செய்திகள்