![](admin/uploads/.60c0b62fb3a6a8.49372812.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: தமிழகத்தில் 3 ஆண்டுகள் காலதாமதத்திற்கு பின்னர், வருகின்ற 27, 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கு எதிராக திமுக உள்ளிட்ட கட்சிகள் மாறி, மாறி வழக்கு தொடர்ந்து வந்தன.
இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி விறுவிறுப்பு அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நடிகரும், திருவாடானை தொகுதி எம்.எல்.ஏவுமான கருணாஸ் தனது ஆதரவு நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார்.
அதாவது தமிழக உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு அளிக்கப் போவதாக கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை கட்சி அறிவித்துள்ளது. விரைவில் அதிமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாகவும் அதன் நிறுவனர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.
முன்னதாக டிடிவி தினகரனின் அமமுகவிற்கு ஆதரவாக கருணாஸ் பேசி வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் அதிமுகவிற்கு ஆதரவான நிலைப்பாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் ராமநாதபுரத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் கருணாஸ் கலந்து கொண்டார். அப்போது நலத்திட்ட உதவிகளை பெறுவது தொடர்பாக முக்குலத்தோர் புலிப்படை நிர்வாகிகளை நம்ப வேண்டாம்.
என்னிடமோ அல்லது அரசு அதிகாரிகளிடமோ நேரடியாக மனுக்களை கொடுங்கள் என்று பேசி சர்ச்சையை கிளப்பினார்.