Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஜீவஜோதி பாஜக-வில் இணைகிறாரா?

டிசம்பர் 13, 2019 12:11

தஞ்சாவூர்: சரவணபவன் ஓட்டல் உரிமையாளர் மீதான வழக்கின் மூலம் வெளியுலகிற்கு தெரியவந்த ஜீவஜோதி தற்போது அரசியல்வாதி ஆகியுள்ளார்.

தனது கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சரவணபவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபாலுக்கு எதிராக நீண்ட சட்டப் போராட்டங்களை நடத்தியவர் ஜீவஜோதி. இதன்மூலம் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை கிடைக்கச் செய்தார். 

இவர் தற்போது ”ஆரி உலகம்” என்ற பெயரில் மகளிர் தையலகம் ஒன்றை நடத்தி வருகிறார். மேலும் மணப்பெண்களுக்கான ஆடை டிசைனிங் பணிகளையும் கவனித்துக் கொண்டிருக்கிறார். இந்த சூழலில் ஜீவஜோதியை பாஜகவில் இணையுமாறு கருப்பு முருகானந்தம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதற்கு அவரும் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் விரைவில் பாஜகவில் சேருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக பாஜக பொதுச் செயலாளர் வானதி சீனிவாசனை சந்தித்து பேசினார்.
அப்போது உங்களை போன்ற தைரியமான பெண்கள் பாஜகவில் இணைய வேண்டும் என்று ஜீவஜோதியிடம் கூறியுள்ளார். எனவே விரைவில் அதிகாரப்பூர்வ தகவலை எதிர்பார்க்கலாம் என்றே கூறப்படுகிறது.

சமீப காலமாக பல்வேறு பிரபலங்களை தங்கள் வசம் ஈர்க்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருகிறது. நமீதா, ராதாரவி என்ற இந்த வரிசையில் ஜீவஜோதியும் தற்போது சேர்ந்து கொண்டார்.

தலைப்புச்செய்திகள்