Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குழந்தைகளின் ஆபாச பட விவகாரம்: 4 மாவட்டங்களில் போலீசார் ரகசிய விசாரணை

டிசம்பர் 13, 2019 12:13

சென்னை: குழந்தைகளின் ஆபாச பட வீடியோ விவகாரம் தொடர்பாக சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

குழந்தைகளின் ஆபாச பட விவகாரத்தில் திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் அல்போன்ஸ் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இதனிடையே குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பார்த்தவர்கள் விவரங்கள் குறித்து மேலும் பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆபாச வீடியோக்களை பகிர்ந்தது மற்றும் பதிவேற்றம் செய்தவர்களின் ஐபி எண்கள் சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

இதனை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பிரிவினர் அனுப்பியுள்ளனர். இந்த மாவட்டங்களில் உள்ளவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தலைப்புச்செய்திகள்