![](admin/uploads/.6094d207166bc3.74057522.jpg)
Wednesday, 3rd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் அரையாண்டு தேர்வில் பிளஸ்-1 பிளஸ்-2 வகுப்புக்கு ஆங்கில தேர்வு நடந்தது.தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் பிளஸ்-1 பிளஸ்-2 படிக்கும் மாணவ- மாணவிகளுக்கான அரையாண்டு தேர்வு தமிழ் தேர்வுடன் தொடங்கியது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளிலும் பிளஸ்-1 பிளஸ்-2 வகுப்புகளுக்கு தேர்வு நடந்தது.
பிளஸ்-2 பயிலும் மாணவ- மாணவிகளுக்கு காலை 10.15 மணிக்கு தொடங்கிய தேர்வு மதியம் 1.15 வரை நட ந்தது. இதேபோல் பிளஸ்-1 பயிலும் மாணவ- மாணவிகளுக்கு மதியம் 2.15 மணிக்கு தொடங்கிய தேர்வு மாலை 5.15 மணி வரை நடந்தது.
தேர்வு அறைக்கு செல்வதற்கு முன்பு வரை மாணவ- மாணவிகள் தேர்விற்காக ஆர்வத்துடன் படித்து கெ £ண்டிருந்ததை காணமுடிந்தது. தேர்வு எழுத தேர்வறைக்கு சென்ற மாணவ- மாணவிகளை அறை கண்க £ணிப்பாளரான ஆசிரியர்கள் சோதனை செய்து உள்ளே அனுமதித்தனர். தேர்வு எழுத எழுதுபொருட்கள் மட் டுமே கொண்டு செல்ல மாணவ- மாணவிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
பெரம்பலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 பிளஸ்-2 மாணவ- மாணவிகள் 600-க்கும் மேற்பட்டோர் தேர்வினை எழுதினர். மேலும் காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத உள்ளிட்ட மாற்றுத்திறனாளி 10 ம £ணவ- மாணவிகளுக்கு தேர்வு எழுத வசதியாக தனி அறை ஒதுக்கப்பட்டிருந்தது. அவர்களுக்கு உதவியாளராக நியமிக்கப்பட்டிருந்த சிறப்பு ஆசிரியைகள் எழுதினர்.