Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஜப்பான் பிரதமரின் இந்திய பயண மாற்றம்

டிசம்பர் 13, 2019 01:37

புதுடில்லி: ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயின், இந்தியா வரும் தேதி மாற்றப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கு பொதுவான தேதிகளில், ஷின்சோ அபே இந்தியா வருவார் என மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அசாம் தலைநகர் கவுகாத்தியில் நடக்கும் இந்தியா - ஜப்பான் உச்சி மாநாட்டில் பங்கேற்க ஷின்சோ அபே, இந்தியா வருவதாக இருந்தது. ஆனால், குடியுரிமை மசோதாவுக்கு எதிராக நடக்கும் போராட்டம் காரணமாக, இந்த மாநாடு, அங்கிருந்து மாற்றப்படும் என மீடியாக்களில் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரவீஸ் குமார் டுவிட்டரில் பதிவிட்டதாவது: ஜப்பான் பிரதமரின் இந்திய வருகையை, எதிர்காலத்தில், இரு நாடுகளுக்கும் உகந்த தேதிக்கு மாற்றுவது என இரு தரப்பும் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்