Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: சென்னை மாநகராட்சி திட்டப்பணிகளுக்கு ஆற்று மணலுக்கு பதிலாக எம்.சேண்ட் பயன்படுத்தி 1000 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றிருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வைத்த குற்றச்சாட்டுக்கு, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மறுப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு மீது களங்கம் சுமத்தி அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் மு.க.ஸ்டாலின் இந்த குற்றச்சாட்டை முன்வைத்திருப்பதாக கூறியுள்ளார்.
மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டது போல் அல்லாமல், ஆற்றுமணலை விட எம்-சேண்டின் விலை அதிகம் என குறிப்பிட்டுள்ள அமைச்சர், அதற்கான விலை நிலவரத்தையும் தெரிவித்துள்ளார்.
மேலும், குற்றச்சாட்டை மு.க.ஸ்டாலின் நிரூபித்தால் தாம் பதவி விலக தயார் எனவும், அவ்வாறில்லை எனில் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும் எனவும் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.