![](admin/uploads/.5cbea78c12e829.33932306.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே பள்ளிக்குச் செல்ல தந்தை தடை விதித்ததால் எட்டாம் வகுப்பு மாணவி தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருத்தாசலத்தை அடுத்த மோசட்டை கிராமத்தைச் சேர்ந்த 8ம் வகுப்பு மாணவியான காவியா, கருவேப்பிலங்குறிச்சியில் உள்ள அரசுப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். மழை பெய்வதால் மாணவியை பள்ளிக்குச் செல்ல வேண்டாம் என அவரது தந்தை வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி, வீட்டில் யாரும் இல்லாத போது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.
பலத்த தீக்காயம் அடைந்த மாணவியை அக்கம்பக்கத்தினர் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மாணவி தீக்குளித்தது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.