Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிப்ரவரி 5-ம் தேதி பெரியகோவில் கும்பாபிஷேகம்

டிசம்பர் 15, 2019 07:03

தஞ்சாவூர்: பிப்ரவரி 5-ம் தேதி பெரியகோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி அடுத்தமாதம் (ஜனவரி) 27-ம் தேதி பூர்வாங்க பூஜை தொடங்குகிறது என கலெக்டர் கோவிந்தராவ் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது்-

தஞ்சை பெரியகோவிலில் சோழ பாண்டிய நாயக்கர் மராட்டிய மன்னர்களின் காலங்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து கடந்த 1980-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3-ம் தேதியும் 1997-ம் ஆண்டு ஜூன் மாதம் 9-ம் தேதியும் சிறப்பாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. அடுத்த ஆண்டு(2020) பிப்ரவரி மாதம் 5-ம் தேதி காலை 9 மணி முதல் 10 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது. கும்பாபிஷேகத்திற்கு முன் நிகழ்வான பூர்வாங்க பூஜை அடுத்தமாதம்(ஜனவரி) 27-ம் தேதி காலை 9 மணிக்கு தொடங்கி பிப்ரவரி 1-ம் தேதி மதியம் 12 மணி வரை நடைபெற உள்ளது.

முதல் கால யாகசாலை பூஜை 1-ம்தேதி தொடங்குகிறது. தொடர்ந்து 2 மற்றும் 3-ம் கால யாகசாலை பூஜை 2-ம் தேதியும் 4 மற்றும் 5-ம் கால யாகசாலை பூஜை 3-ம் தேதியும் 6 மற்றும் 7-ம் கால யாகசாலை பூஜை 4-ம் தேதியும் 8-ம் கால யாகசாலை பூஜை 5-ம் தேதி காலையிலும் நடக்கிறது. மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்