Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேட்புமனு பெறும் பணி தீவிரம்

டிசம்பர் 15, 2019 07:05

கரூர்: கரூர் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஒன்றிய அலுவலகங்களில் வேட்பு மனுக்கள் பெறும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கரூர் தாந்தோணி க.பரமத்தி உள்ளிட்ட 8 ஊராட்சி ஒன்றியங்களில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர். ஒன்றிய வார்டு உறுப்பினர்இ கிராம ஊராட்சி தலைவர் கிராம ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு வருகிற 27 மற்றும் 30-ந்தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறஉள்ளது.

இதையொட்டி கடந்த 9-ந்தேதியிலிருந்து வேட்புமனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. கிராம ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு மட்டும் அந்தந்த ஊராட்சி செயலரிடம் வேட்புமனு பெறப்படுகிறது. மற்ற 3 பதவிகளுக்கும் ஒன்றிய அலுவலகத்தில் வேட்புமனுக்கள் பெறப்படுகின்றன.

இந்த நிலையில் அதிகாரிகள் வேட்புமனுக்களை பெற வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. எனினும் ஞாயிற்றுக் கிழமை விடுமுறை தவிர்த்து 16-ந்தேதியுடன் (திங்கட் கிழமை) மனுக்கள் பெறுவது நிறைவு பெறுகிறது. இதையொட்டி அ.தி.மு.க. தி.மு.க. உள்ளிட்ட பிரதான அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு செய்வதில் தீவரமாக இறங்கியுள்ளன. இதற்கிடையே கட்சியினர் ஆங்காங்கே வேட்புமனுதாக்கலையும் துரிதப்படுத்தி தான் வருகின்றனர்.

அந்த வகையில் கரூர் தாந்தோணி உள்ளிட்ட ஒன்றிய அலுவலகங்களில் கிராம ஊராட்சி தலைவர் உள்ளிட்டவற்றுக்கு வேட்புமனுதாக்கல் செய்ய கோயம்பள்ளி செல்லிபாளையம் பஞ்சமாதேவி வாங்கல் ஆத்தூர் பூலாம்பாளையம் மண்மங்கலம் சின்னஆண்டாங்கோவில் உள்ளிட்ட ஊரக பகுதிகளில் இருந்து மேள-தாளத்துடன் ஆதரவாளர்கள் குத்தாட்டம் போட்டு புடைசூழ பலர் ஆர்வத்துடன் வந்து வேட்புமனுவை தாக்கல் செய்ததை காண முடிந்தது. இதையொட்டி ஒன்றிய அலுவலகத்தின் நுழைவு வாயிலில் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.

கூட்டமாக வந்தவர்களை தடுத்து நிறுத்தி வேட்புமனு தாக்கல் செய்பவருடன் 4 பேர் என மொத்தம் 5 பேரை மட்டுமே உள்ளே அனுப்பி வைத்தனர். மேலும் ஒன்றிய அலுவலகத்தில் வேட்புமனுக்கள் பெறப்படும் இடங்கள் உள்ளிட்டவை கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது.

தலைப்புச்செய்திகள்