Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஒருநாள் மாத்தி சாப்பிடுங்க: நெகிழவைத்த சத்துணவுப் பணியாளர்

டிசம்பர் 15, 2019 09:44

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே முக்கண்ணாமலைப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 100 மாணவர்கள் வரையிலும் படித்து வருகின்றனர். இங்கு சத்துணவுப் பணியாளராக பாரிசா பேகம் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் தினமும் மாணவர்களுக்குச் சத்துணவு சமைத்துக் கொடுப்பது வழக்கம்.

இந்த நிலையில், தினமும் தான் சமைக்கும் சத்துணவை மட்டுமே சாப்பிடும் பிள்ளைகளுக்கு, ஒரு நேரமாவது பிரியாணி சாப்பாடு போட வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. அந்த ஆசையைத் தற்போது நிறைவேற்றி உள்ளார். பள்ளியில் பயிலும் மாணவர்கள் உட்பட அனைவருக்கும் மட்டன் பிரியாணி விருந்து வழங்கி நெகிழ்ச்சியடைய செய்துள்ளார்.

இதுபற்றி ஆசிரியர்களிடம் கேட்டபோது, "வழக்கமாக, சத்துணவைத் தினமும் மாணவர்கள் சாப்பிடுவதால், அதில் எந்தக் குறையும் வந்துவிடக்கூடாது என்பதற்காக, ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து சமைப்பார். அதுபோலத் தான் இந்தப் பிரியாணியையும் எந்தக் குறையும் இல்லாமல் சமைத்துள்ளார்.

குறிப்பாக, தன் சொந்தச் செலவில், தலைவாழை இலையுடன் எங்களுக்குப் பிரியாணி விருந்து கொடுத்துள்ளார். பிரியாணி விருந்தையும், சத்துணவு ஊழியரின் அன்பையும் என்றும் மறக்க மாட்டோம். எங்களுக்கு கிராம மக்களும், இளைஞர்களும் முழு ஆதரவு கொடுக்கின்றனர். சமீபத்தில் கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பிரியாணி விருந்து கொடுத்தனர்" என மகிழ்ச்சி தெரிவித்தனர்.

தலைப்புச்செய்திகள்