Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

10 பசுக்களுக்கு போர்வை தானம் செய்தால் துப்பாக்கி உரிமம்?

டிசம்பர் 16, 2019 02:35

மத்திய பிரதேசம்: மத்திய பிரதேசத்தில் பத்து பசு மாடுகளுக்கு போர்வை வழங்கியவர்கள் உடனடியாக துப்பாக்கி உரிமம் பெற்றுக்கொள்ளலாம் என கவுகாத்தி மாவட்டஃ ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக குளிர் அதிகமாக உள்ளது. கோலாகா மந்திர் மற்றும் லால் திபரா ஆகிய பகுதிகளில் உள்ள கோசாலைகளில் சுமார் 8 ஆயிரம் பசுக்கள் உள்ளன.

கோலாகா மந்திர் பகுதியில் அரசு நடத்தும் கோசாலையில் 6 பசு மாடுகள் அண்மையில் குளிரால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தன. இதனால் பசுக்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடந்த வாரம் பஜ்ரங்தள் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

இச்சூழலில் குவாலியர் மாவட்ட ஆட்சியர் அனுராக் சௌத்ரி சனிக்கிழமையன்று மாவட்டத்தில் உள்ள அரசு நடத்தும் கோசாலைகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின், பசுக்களுக்கு போர்வை வாங்கிக்கொடுப்பவர்களுக்கு துப்பாக்கி உரிமம் தருவாகத் தெரிவித்திருக்கிறார்.

இது பற்றி குவாலியர் மாவட்ட ஆட்சியரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “துப்பாக்கி உரிமம் கேட்டு விண்ணப்பித்தவர்கள் கோசாலைகளில் இருக்கும் பசுக்களில் குறைந்தது 10 பசுக்களுக்கு போர்வையை தானமாக வழங்க வேண்டும். அவ்வாறு செய்பவர்களுக்கு உடனே துப்பாக்கி உரிமம் வழங்கப்படும்.” என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த ஜுன் மாதம் இதே கலெக்டர் அனுராக் சவுத்ரி, துப்பாக்கி உரிமம் கேட்பவர்கள் மரக்கன்றை நட்டு அத்துடன் செல்ஃபி, அந்தப் படத்தை விண்ணப்பத்துடன் இணைத்து சமர்பிக்க வேண்டும் எனக் கூறினார்.

தலைப்புச்செய்திகள்