Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: தேர்தல் பயிற்சியில் கலந்து கொள்ளாத ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தல்களில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களாகவும்,அலுவலர்களாகவும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள்.
அவர்களுக்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பயிற்சியில், ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்ளவில்லை என புகார் எழுந்துள்ளது.
இதையடுத்து பயிற்சியில் பங்கேற்காத ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் இன்று மாலைக்குள் விளக்கமளிக்கும்படி மாவட்ட தேர்தல் அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நாளை நடைபெறும் பயிற்சியில் பங்கேற்க வேண்டுமெனவும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.