Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் பொங்கல் பரிசு வழங்க தடை

டிசம்பர் 19, 2019 10:08

மதுரை: தமிழகத்தில் ஊரக அமைப்புகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் வரும் 27-ம் தேதி மற்றும் 30-ம் தேதி என இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் முடிவடைந்து, இன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளது.

இந்நிலையில், பொங்கல் பரிசு வழங்க தடை விதிக்கக் கோரி திண்டுக்கல்லைச் சேர்ந்த சுப்புலட்சுமி என்பவர் தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள 27 மாவட்டங்களில் பொங்கல் பரிசு வழங்க தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்கவில்லை என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

‘ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களில் பொங்கல் பரிசு வழங்க தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் பொங்கல் பரிசு வழங்க அனுமதி அளிக்கும்படி தேர்தல் ஆணையத்திடம் கேட்டுள்ளோம்.

இதற்கு தேர்தல் ஆணையம் இன்னும் பதில் அளிக்கவில்லை.’ என தமிழக அரசு கூறியுள்ளது. தமிழக அரசு விளக்கம் அளித்ததையடுத்து, இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. 

தலைப்புச்செய்திகள்