Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பல் மருத்துவ கல்லூரி சார்பில் நடமாடும் மருத்துவமனை தொடக்கம்

டிசம்பர் 22, 2019 08:05

மதுராந்தகம்: அதிநவீன வசதிகள் கொண்ட நடமாடும் மருத்துவமனை குளிர் சாதன வசதி கொண்ட பஸ் ஆகும். இதில் காணொலி காட்சி மூலமாக நோயாளிகள் நேரடியாக சிறப்பு மருத்துவரை தொடர்பு கொள்ள முடியும். இதனை ஆதிபராசக்தி மருத்துவமனை துணைத்தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரமேஷ், முதன்மை செயல் அதிகாரி சேகர், பல் மருத்துவ கல்லூரி முதல்வர் வசந்தகுமாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

இந்த நடமாடும் மருத்துவமனை மூலம் மதுராந்தகம், வந்தவாசி, உத்திரமேரூர், வெண்மாலகரம், திண்டிவனம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த மக்கள் மருத்துவ வசதியை பெற முடியும். இதனால் ஏழை, எளிய நோயாளிகள் அதிநவீன மருத்துவ சிகிச்சைகளை இருந்த இடத்திலேயே பெறலாம். 

இதில் படுக்கை வசதிகள் அவசரகால சிகிச்சை வசதிகள், பல் மருத்துவ சிகிச்சை அளிக்க சிறப்பு வசதிகள் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நோயாளிகளுக்கு பயண நேரங்கள் மிச்சப்படும் என ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். 

தலைப்புச்செய்திகள்