Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருச்சியில் தேசிய கராத்தே போட்டி

டிசம்பர் 23, 2019 08:43

திருச்சி: ஷோட்டோகான் கராத்தே வேல்டு பெடரேஷன் சார்பில் தேசிய அளவிலான கராத்தே போட்டி திருச்சி தேசியக் கல்லூரியில் நடைபெற்றது. போட்டியில் தமிழ்நாடு கேரளா ஒரிசா கர்நாடகம் டெல்லி போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட கராத்தே வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். 

போட்டியானது கட்டா குமிட்டே என்ற 2 பிரிவின் கீழ் நடைபெற்றது. இந்த போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதிவு செய்யப்பட்ட சான்றிதழ்களும் பதக்கங்களும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாநில செயலாளர் சென்சாய் ஈஸ்வர குமார் வழங்கினார்.  போட்டிக்கான ஏற்பாடுகளை தலைமை பயிற்சியாளர் கராத்தே சங்கர் செய்திருந்தார்.

தலைப்புச்செய்திகள்