![](admin/uploads/.60cae18e3877b0.77808406.jpg)
Wednesday, 3rd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கோவை: சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில், கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்த ஹபீஸ் என்பவரிடம் இருந்து 355 பெட்டிகளில் வெளிநாட்டு சிகரெட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.10 லட்சத்தி 65 ஆயிரம்.
திருவனந்தபுரத்தை சேர்ந்த பிரெடின் ஆண்டோ என்பவரிடம் 355 பெட்டிகளில் வெளிநாட்டு சிகரெட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ.10 லட்சத்தி 50 ஆயிரம். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.