![](admin/uploads/.5f57177b324a71.94974313.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுடெல்லி: தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
டெல்லி சட்ட்சபையின் பதவிக்காலம் பிப்ரவரி 22-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. 2020, ஜனவரி 6ம் தேதி நிலவரப்படி டெல்லியில் ஒரு கோடியே 46 லட்சத்து 92 ஆயிரத்து 136 வாக்காளர்கள் உள்ளனர். டெல்லி சட்டசபை தேர்தல் தொடர்பாக 4 கட்டங்களாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தலைமை செயலாளர், காவல்துறை செயலாளர் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
தேர்தலை நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடத்துவதில் ஆணையம் உறுதியாக உள்ளது. வாக்காளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்படும். மூத்த குடிமக்களுக்கு வாகன வசதி செய்து தரப்படும்.
தேர்தலுக்காக 13,750 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. 90 ஆயிரம் அதிகாரிகள் பயன்படுத்தப்பட உள்ளனர். டெல்லியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. வேட்பு மனுதாக்கல் வரும் 14ம் தேதி தொடங்கும். பிப்ரவரி 8-ம் தேதி தேர்தல் நடைபெறும். அன்று பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 11ம் தேதி எண்ணப்படும் என தெரிவித்தார்.