Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரஜினியின் தர்பாரை பார்க்க ஜப்பானில் இருந்து சென்னை வந்த ரசிகர்

ஜனவரி 08, 2020 10:38

தர்பார் படத்தை பார்க்க ரஜினி ரசிகர் ஒருவர் ஜப்பானில் இருந்து சென்னை வந்துள்ளார். ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள தர்பார் படம் நாளை பிரமாண்டமாக ரிலீஸாக உள்ளது. படத்தை முதல் நாளே பார்த்துவிடும் ஆசையில் உள்ளனர் ரஜினி ரசிகர்கள். தமிழ், தெலுங்கு, இந்தி என்று மூன்று மொழிகளில் தர்பார் ரிலீஸாக உள்ளது. உலகம் முழுவதும் 7 ஆயிரம் ஸ்கிரீன்களில் தர்பார் படத்தை வெளியிடுகிறார்கள். இந்நிலையில் தான் அந்த அதிசயம் நடந்துள்ளது.

ரஜினிக்கு ஜப்பானில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர் என்பது அனைவருக்கும் தெரியும். அவரின் முத்து படம் ஜப்பானில் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இந்நிலையில் ஜப்பானை சேர்ந்த ரஜினி ரசிகர் யஷுதா ஹிதேதோஷி தர்பார் படம் பார்க்க சென்னை வந்துள்ளார். அவர் சென்னையில் உள்ள ரோஹினி தியேட்டரில் தமிழ் ரசிகர்களுடன் சேர்ந்து நாளை தர்பார் படத்தை பார்த்து ரசிக்க உள்ளார். யஷுதா ரஜினி படத்தை பார்க்க அவ்வளவு தூரம் வந்துள்ளதை தியேட்டர் எம்.டி. ட்விட்டரில் புகைப்படத்துடன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக யஷுதா கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படத்தை பார்க்கவும் சென்னை வந்திருந்தார். தற்போது மீண்டும் ரஜினி படத்தை பார்க்க சென்னை வந்ததில் மகிழ்ச்சியாக உள்ளதாக யஷுதா தெரிவித்துள்ளார். யஷுதா வந்துள்ள விபரம் அறிந்த ரஜினி ரசிகர்களோ தலைவர்னா சும்மாவா என்று பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தர்பார் பட ப்ரொமோ வீடியோக்களை பார்க்கும் போது ரஜினி பேட்ட படத்தை விட ஸ்டைலாகவும், இளமையாகவும் தெரிகிறார். போலீஸ் அதிகாரி என்றாலே அலெக்ஸ் பாண்டியன் கதாபாத்திரம் தான் என்று இந்நாள் வரை உள்ளது. அந்த இமேஜை ஆதித்யா அருணாச்சலம் உடைப்பாரா என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தலைப்புச்செய்திகள்