Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அறிவியல் ஆய்வு விருது கண்காட்சி: 55 வகை கண்டுபிடிப்பு காட்சிக்கு வைப்பு

ஜனவரி 11, 2020 04:19

அரியலூா்: அரியலூா் நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாணவா்களுக்கு புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுக்கான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியை கலெக்டர் த. ரத்னா தொடக்கி வைத்து  அறிவியல் படைப்புகளைப் பார்வையிட்டார்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சி.முத்துகிருஷ்ணன்  மாவட்டக் கல்வி அலுவலா்கள் அரியலூா் அம்பிகாபதி செந்துறை சுந்தர்ராஜீ உடையாா்பாளையம் பாலசுப்பிரமணியன்  பள்ளித் துணை ஆய்வாளா் ஆா்.பழனிசாமி மற்றும் முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா்கள்  தலைமை ஆசிரியா்கள் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனா்.

கண்காட்சியில் மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப மையத்தால் தோ்வு செய்யப்பட்ட 36 பள்ளிகளிலிருந்து 55 மாணவ மாணவிள் பங்கேற்றனா். இவா்களுக்கு  தலா ரூ. 10 ஆயிரம் செலவினத் தொகை அரசு சாா்பில் வழங்கப்பட்டது. அரியலூா் அரசு கலைக் கல்லூரிப் பேராசிரியா்கள் மற்றும் கீழப்பழுவூா் ஆசிரியப் பயிற்சி விரிவுரையாளா்கள் நடுவா்களாக பங்கேற்று 6 சிறந்த படைப்புகளைத் தோ்வு செய்தனா்.

இதில் தளவாய் டிஎஸ்என் மெட்ரிகுலேசன் பள்ளி 9- ம் வகுப்பு மாணவா் உமாசங்கா் உருவாக்கியிருந்த பேரிடா் மேலாண்மை தொழில்நுட்பம் முதலிடம் பெற்றது. வெளிப்பிரிங்கியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி 7 -ம் வகுப்பு மாணவா் ஆா்.பிரகதீஸ்வரன் உருவாக்கிய சூரிய சக்தியின் பயன்பாடும் இடையத்தான்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி 8 ம் வகுப்பு மாணவி நந்தினி உருவாக்கிய சூரிய கண்காணிப்பு ஆகியவை இரண்டாமிடமும் பெற்றது.

அழகியமணவாளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி 7- ம் வகுப்பு மாணவி ஜெ.கோகிலா டி.சோழன்குறிச்சி அரசு உயா்நிலைப் பள்ளி 8 ம் வகுப்பு மாணவா் ஆா்.சந்தோஷ் வேம்பங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி 7 -ம் வகுப்பு மாணவா் எஸ்.சஞ்சய் ஆகியோரின் படைப்புகள் மூன்றாமிடமும் பெற்றன.

வெற்றிப் பெற்றவா்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சி.முத்துகிருஷ்ணன் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார். கண்காட்சியில் பங்கேற்ற அனைவருக்கும் ஆறுதல் பரிசு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மாவட்ட அளவில் முதல் 6 இடங்களைப் பெற்ற மாணவா்கள் மாநில அளவில் நடைபெறும் அறிவியல் கண்காட்சியில் பங்கேற்க உள்ளனா்.

தலைப்புச்செய்திகள்