Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

16 காளைகளை அடக்கிய பிரபாகரன்: பாலமேடு ஜல்லிக்கட்டில் முதல் பரிசு

ஜனவரி 16, 2020 12:33

மதுரை: மதுரை மாவட்டம் பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி இன்று நிறைவடைந்தது பாலமேடு ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அடக்கி காரை பரிசாக வென்றார் பிரபாகரன். சிறந்த காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

பாலமேட்டில் இன்று நடந்த ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கு முதல் மூன்று பரிசுகளும், சிறந்த காளைகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டது.

மதுரை மாவட்டம் பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டி சிறப்பாக நடந்தது. சரியாக காலை 8 மணியளவில் தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டி மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. இந்த போட்டியில் மொத்தம் 676 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.

விழாவின் முடிவில் அமைச்சர் ஆர்.பி.உதயகுயமார், மாவட்ட ஆட்சியர், காவல்துறை டிஜிபி, எஸ்பி ஆகியோர் கலந்துகொண்டு போட்டியில் வென்ற வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினர். இதில் முதல் பரிசை சோழவந்தான் சட்ட மன்ற தொகுதியைச் சேர்ந்த பிரபாகரன் என்ற வீரர் களத்தில் 16 காளைகளை பிடித்து தட்டி சென்றார். அவருக்கு 6 லட்ச ரூபாய் மதிப்புள்ள மாருதி சுசுகி இக்னிஸ் கார் பரிசாக அளிக்கப்பட்டது.

ஐயப்பன் நாயக்கன்பட்டியைச் சேர்ந்த ராஜா என்ற வீரர் 13 காளைகளை அடக்கி இரண்டாவது பரிசை தட்டி சென்றார். இவருக்கு கோப்பையும், சான்றிதழும் வழங்கப்பட்டது.

10 காளைகளை அடக்கி கார்த்தி என்ற வீரர் மூன்றாவது பரிசை தட்டி சென்றார். வெற்றி பெற்ற அனைத்து வீரர்களுக்கும் கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும் களத்தில் வீரர்களின் பிடியால் சிக்காமல் தண்ணி காட்டிய சிறந்த மூன்று காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

இதில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் காளைக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. காளையின் உரிமையாளருக்கு ஒரு லட்சம் மதிப்புள்ள காங்கேயம் பசுவும், கன்றுக்குட்டியும் வழங்கப்பட்டது. இரண்டாவது பரிசு பெற்ற காளையின் உரிமையாளர் செல்வத்துக்கு டிவிஎஸ் விக்டர் பைக் பரிசாக வழங்கப்பட்டது.

தலைப்புச்செய்திகள்