Sunday, 7th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சிவகங்கை : காரைக்குடி அருகே சிராவயலில் நடந்த மஞ்சு விரட்டின் போது ஜல்லிக்கட்டு களத்தில் சீற்றம் கொண்டு கண்ணில் பட்ட வீரர்களை எல்லாம் பந்தாடப் பாயும் காளை திடீரென எதிர்ப்பட செய்வதறியாது திகைத்துப்போனார் குழந்தைகளுடன் வந்த பெண் ஒருவர்.
'பாய்ச்சலும் மோதலும் வீரம் விளையாடும் களத்தில் மட்டும் தான்; மற்ற நேரங்களில் கருணை கொண்ட நண்பன் நான்' என்பதை விளக்கும் விதமாக பெண் குழந்தைகளை ஏதும் செய்யாமல் பாய்ந்து சென்றது இந்தக் காளை. சிவகங்கை மாவட்டம் சிராவயலில் மஞ்சுவிரட்டு (ஜல்லிக்கட்டில் ஒரு வகை) நடந்த போது களத்திற்கு வெளியே இந்த கருணை நிகழ்வு நடந்தது.
காளையின் கருணை வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.