Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருப்பதியில் ஒரு இலவச லட்டு: பக்தர்களுக்கு இன்றுமுதல் விநியோகம்

ஜனவரி 20, 2020 01:42

திருமலை: திருப்பதியில் பக்தர்களுக்கு இன்று முதல் ஒரு இலவச லட்டு வழங்கப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதம் மிகவும் பிரசித்தி பெற்றது. இலவச தரிசனம், திவ்ய தரிசனம், சர்வ தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு சலுகை விலையில் 4 லட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. மலைப்பாதையில் பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு மட்டும் ஒரு இலவச லட்டு வழங்கப்பட்டது. இதுதவிர வெளிமார்க்கெட் விலையிலும் லட்டு வழங்கப்படுகிறது.

இந்தநிலையில் அனைத்து பக்தர்களுக்கும் இன்று முதல் ஒரு இலவச லட்டு வழங்கப்படும் என கடந்த மாதம் 28ம் தேதி நடந்த அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதன்படி இன்று சுவாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு ஒரு இலவச லட்டு வினியோகம் செய்யப்பட்டது. கூடுதலாக லட்டு தேவைப்படும் பக்தர்கள், கோயிலுக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள கவுன்டரில் ரூ50 செலுத்தி லட்டு வாங்கிக்கொள்ளலாம். இது பக்தர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தலைப்புச்செய்திகள்