![](admin/uploads/.5ca85f24edc1f2.31255237.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
டாவோஸ்: நான் மட்டும் இன்று அமைச்சராக இல்லாவிட்டால் ஏர் இந்தியா நிறுவனத்தை நிறுவனத்தை ஏலம் கேட்க முயல்வேன் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
பெரும் கடனிலும், நஷ்டத்திலும் சிக்கித் தவிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முயற்சித்து வரும் நிலையில் அமைச்சர் பியூஷ் கோயல் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடக்கும் உலகப் பொருளாதாரக் கூட்டமைப்பு மாநாட்டில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்றார். இந்த மாநாட்டில் "2020-ம் ஆண்டில் இந்தியாவின் கண்ணோட்டம் மற்றும் திட்டம்" என்ற தலைப்பில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேசினார்.
அவர் கூறுகையில், " பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு முதல் முறையாக ஆட்சிக்கு வந்தபோது, நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலையில் இருந்தது. பொருளாதாரத்தை மீண்டும் நல்ல நிலைமைக்குக் கொண்டுவரத் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்தது.