Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முன்னாள் நீதிபதிகள் பேரணி: ஐகோர்ட் அதிருப்தி

ஜனவரி 31, 2020 09:07

சென்னை; சென்னை ஐகோர்ட் வளாகத்தில், முன்னாள் நீதிபதிகள் பேரணி நடத்தியதற்கு சென்னை ஐகோர்ட் அதிருப்தி தெரிவித்துள்ளது. சென்னை ஐகோர்ட்டில் சிஐஎஸ்எப் வீரர்களின் பாதுகாப்பை பலப்படுத்தக்கோரும் வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சாஹி கூறுகையில், முன்னாள் நீதிபதிகள் ஹரி பரந்தாமன், கண்ணன், அக்பர் அலி ஆகியோர் பேரணியில் பங்கேற்றது வேதனை அளிக்கிறது. கோர்ட் வளாகத்தில் நீதிபதிகள் பேரணியில் பங்கேற்றது கோர்ட் மாண்பை கெடுப்பதாக உள்ளது. நீதிமன்றம் பொது சொத்து என்பதை உணர்ந்து முன்னாள் நீதிபதிகள் செயல்பட வேண்டும். அதுமட்டுமல்லாமல், இவ்விவகாரம் குறித்து நீதிமன்ற பாதுகாப்பு குழு விசாரிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்