![](admin/uploads/.5cd3bd93ac2a44.57352816.gif)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் பண்ணை வீடு சிவகங்கை மாவட்டம் நாச்சியார்புரம் பகுதியில் உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு ப.சிதம்பரத்தின் பண்ணை வீட்டின் அருகே பைப் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.
இது தொடர்பாக சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த வழக்கில் தொடர்புடைய முரசு, காளை லிங்கம், தமிழ் அரசன், ராஜா, ஜான், ஆதி ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள வெடிகுண்டு வழக்குகள் விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரணை செய்த நீதிபதி செந்தூர்பாண்டி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினார்.
இதில் குற்றம்சாட்டப்பட்ட 6 பேருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் விஜயராஜ் ஆஜராகி வாதாடினார்.