Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருச்சியில் எல்.ஐ.சி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்- ஸ்டிரைக்

பிப்ரவரி 05, 2020 10:11

திருச்சி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயுள் காப்பீட்டுக் கழக ஊழியா்கள் திருச்சியில் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

காப்பீட்டுக் கழகம் (எல்.ஐ.சி.) பங்குகள் விற்பனை செய்யப்படும் என அறிவிப்பை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். மக்கள் சேமிப்பைப் பாதுகாக்கும் பங்குகளை விற்பனை செய்யக்கூடாது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி பாரதியாா் சாலையிலுள்ள ஆயுள் காப்பீட்டுக் கழக அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அகில இந்திய காப்பீடு ஊழியா்கள் சங்க கோட்டத் துணைத் தலைவா் ஜோன்ஸ் தலைமை வகித்தார்.

முதல்நிலை அதிகாரிகள் சங்க நிா்வாகி காா்த்திகேயன்  வளா்ச்சி அதிகாரிகள் சங்க நிர்வாகி துரைராஜ்  முகவா் சங்க நிர்வாகி வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனா். ஏராளமானோா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா். முன்னதாக ஒரு மணி நேரம் வேலை நிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தலைப்புச்செய்திகள்