![](admin/uploads/.623c081903af58.49375215.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: சென்னை பனையூரில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் 2வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.'பிகில்' படத்திற்காக வாங்கிய சம்பளம் குறித்து புகார் எழுந்தது. இதன் காரணமாக நெய்வேலியில் நேற்று பிற்பகல் 2 மணி அளவில் படப்பிடிப்பு தளத்திற்கு வந்தனர். அப்போது நடிகர் விஜயிடம் , பிகில் படத்தில் பெற்ற ஊதியம் குறித்து விசாரிக்க வேண்டும் என்று சம்மன் கொடுத்தனர். கொடுத்ததும் இல்லாமல், கையோடவே, நடிகர் விஜயை காரில் அழைத்து சென்றனர்.
பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவத்திற்கு சொந்தமான இடங்களில் நேற்று (பிப்.,05) காலை முதல் சோதனை நடத்தப்பட்டு வந்த நிலையில், 'பிகில்' படத்தில் நடித்த போது வாங்கிய சம்பளம் குறித்து விஜயிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் அவருக்கு சொந்தமான சாலிக்கிராமம் வீடு, பனையூரில் உள்ள பண்ணை வீடு ஆகிய இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் விடிய விடிய சோதனை மேற்கொண்டனர்.மதுரை தெற்குமாசி வீதியில் உள்ள சினிமா பைனான்சியர் வீடுகளிலும் இன்றும் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.