Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ம.பி.யில் குழந்தை கடத்தல் கும்பல் என புரளி: விவசாயி ஒருவர் அடித்துக் கொலை

பிப்ரவரி 06, 2020 05:19

போபால்: மத்தியபிரதேசத்தில் குழந்தை கடத்தல் கும்பல் என தவறாக நினைத்து விவசாயி ஒருவரை கிராம மக்கள் அடித்து கொலை செய்துள்ளனர். தாரஞ்சி மாவட்டத்தில் விவசாய வேலைக்கு பணம் பெற்றுக்கொண்டு வேலைக்கு வராமல் சிலர் இருந்தனர். இதனை கண்டித்து பணத்தை திரும்பப்பெற சென்ற 7 பேரை குழந்தை கடத்தல் கும்பல் என்று பணம் பெற்றவர்கள் தவறான புரளியை பரப்பியுள்ளனர். அதனை நம்பிய கிராம மக்கள் அவர்களை சரமாரியாக தாக்கினர். இதில் கணேஷ் படேல் என்பவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். 

மேலும் 6 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். பணத்தை திரும்ப அளிக்காமல் தப்பிக்கவே இதுபோன்ற புரளியை பரப்பி கிராம மக்களை தூண்டிவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதில் 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்களை காவல்துறையினர் தேடி விசாரித்து வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்