Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டி.என்.பி.எஸ்.சி. முறைகேடுகள்: சிறப்பு விசாரணைக்குழு அமைக்க சி.பி.சி.ஐ.டி. முடிவு

பிப்ரவரி 07, 2020 08:50

சென்னை: டி.என்.பி.எஸ்.சி தேர்வில் நடைபெற்ற முறைகேடு நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டே போகிறது. தொடர்ந்து புதிய புதிய நபர்கள் கைது செய்யப்பட்டு வரும் நிலையில் புதிய விசாரணைக்குழுவை அமைக்க சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இராமேஸ்வரம், கீழக்கரை ஆகிய இரு தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் மட்டும் எப்படி முதல் 100 இடங்களைப் பிடித்தனர் என்ற சந்தேகம், அது தொடர்பாக எழுந்த புகார் இதில் பெரியளவில் முறைகேடு நடந்திருப்பதை வெளிக்கொண்டு வந்தது.

இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையின் பேரில் முக்கிய நபர்களான சித்தாண்டி , ஜெயக்குமார் உள்ளிட்டோர் சிக்கியுள்ளனர். நேற்று ஜெயக்குமார் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இன்று அவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி முறைகேட்டை விசாரிக்க சிறப்பு விசாரணைக்குழு அமைக்க சிபிசிஐடி போலீஸ் முடிவு செய்துள்ளது. ஜெயக்குமார், சித்தாண்டி ஆகியோருக்குப் பின்புலமாக செயல்பட்டவர்கள் யார் என இந்தக்குழு விசாரிக்க உள்ளது.

நாள்தோறும் புதுப்புது புகார்கள் வெடித்து கிளம்புவதால் இந்த பெரிய வழக்கை விசாரிக்க இப்படி ஒரு தனிக்குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்