![](admin/uploads/.5ece45ba5b3b67.26522456.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருச்சி; திருச்சி பெரிய மிளகுபாறை பகுதியில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த மதிமுக 54வது வார்டு செயலாளர் செல்லதுரை தெரிவித்ததாவது: திருச்சி பெரிய மிளகுபாறை துலுக்கானத்தம்மன் கோவில் தெரு, ஆதிதிராவிடர் தெரு, புதுத்தெரு, நாயக்கர் தெரு, கோரிமேடு, கள்ளர் தெரு ஆகிய பகுதிகளில் துப்புரவு பணியாளர்கள் சரியான முறையில் செயல்படுவதில்லை. இந்தப் பகுதி முடிய மேஸ்திரியும் கண்டும் காணாமல் வேலை செய்கிறார்.
இந்தப் பகுதியில் சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்பதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இப்பகுதி மக்கள் நடமாட முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுத்து கழிவுநீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இல்லை என்றால் மக்களை ஒன்று திரட்டி. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் மாபெரும் போர £ட்டம் நடத்த தயாராக இருக்கிறோம். இவ்வாறு திருச்சி 54 வது வார்டு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக செயலாளர் செல்லதுரை தெரிவித்தார்.