Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பேரறிவாளன் விடுதலை-ஆளுநரின் நிலை என்ன?, கேட்டுச்சொல்லுங்கள்: உச்சநீதிமன்றம்

பிப்ரவரி 11, 2020 01:57

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள பேரறிவாளன் தன் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது,

ஏற்கனவே கடந்த முறை உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் சி.பி.ஐ தரப்பில் உரிய புதிய நிலவர அறிக்கை தாக்கல் செய்யாததால், பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசு சட்டப்பூர்வமாக எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும், தீர்மானங்கள் குறித்தும் அதன் நிலை குறித்தும் நீதிமன்றத்தில் தெரிவிக்க உத்தரவிடப்பட்டது.

தமிழக அரசு தரப்பு ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் பாலாஜிகூறும்போது, “ஏழுபேர் விடுதலை தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. அதன் மீது முடிவெடுக்கப்படாமல் உள்ளது. மேலும் ஆளுநருக்கு அரசு அழுத்தம் கொடுக்க முடியாது” என்று தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஆளுநரும் ஒரு அரசின் பிரதிநிதிதானே, அவரிடம் அரசு தான் கேட்க வேண்டும்.எனவே ஆளுநரிடம் போய் கேட்டுக் கூறுங்கள். விடுதலை தொடர்பான சட்டப்பேரவை தீர்மானம் என்னவானது, அதன் நிலை என்ன என்பது தொடர்பாக ஆளுநர் முன்பு முறையிடுங்கள் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

“விடுதலை சம்பந்தமான கோப்பு ஆளுநர் முன்பு ஏன் இத்தனை காலம் நிலுவையில் உள்ளது ? ஆளுநருக்கு எங்களால் நேரடி அழுத்தம் கொடுக்க முடியாது, எனவே தமிழக அரசு அந்த கோப்புகள் நிலையென்ன என்பது தொடர்பாக கேட்டு தெரிவிக்க வேண்டும். விடுதலை தொடர்பான தீர்மானம் போட்டு அனுப்பியது தொடர்பாக ஆளுநரிடம் கேட்க வேண்டியது நாங்களல்ல.

விடுதலை செய்வது என்ற தீர்மானம் தொடர்பான கோப்புகள் குறித்து அரசு தான் கேட்க வேண்டும், எனவே தீர்மானம் மீதான முடிவு என்ன, அதன் நிலை என்ன என்பது தொடர்பாக ஆளுநரிடம் கேட்டு தெரிவியுங்கள்?”. எனத்தெரிவித்து வழக்கை 2 வார காலத்திற்கு ஒத்திவைத்தனர்.

தலைப்புச்செய்திகள்