![](admin/uploads/.5df45b31ef50e5.32760447.gif)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய மூன்றுக்கும் எதிர்ப்புத் தெரிவித்து வட இந்தியாவில் தொடங்கிய போராட்டங்கள் தற்போது தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகின்றன. இந்த போராட்டங்களை கண்காணிக்க 6 சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக டிஜிபி உத்தரவிட்டார்.
இதுதொடர்பாக டிஜிபி திரிபாதி பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:
அதன்படி சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி அபய்குமார் சிங், மதுரை நகரம், மதுரை சரகம் பகுதிகளுக்கும், காவல் துறை செயலாக்க ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் மற்றும் பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு ஐஜி முருகன் ஆகியோர் திருநெல்வேலிக்கும் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், பழனி பகுதிகளுக்கு ஜி.ஸ்டாலின், தேனி மாவட்டம், கம்பம், போடி பகுதிகளுக்கு பாஸ்கரன், தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் பகுதிகளுக்கு மகேந்திரன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களை ஒருங்கிணைத்து சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஜெயந்த் முரளி செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரிகளை ஒருங்கிணைத்து சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.