Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சீனர்கள் 14 பேருடன் தூத்துக்குடி துறைமுகம் வந்த கப்பலுக்கு அனுமதி?

பிப்ரவரி 16, 2020 08:11

தூத்துக்குடி: சீனர்கள் 14 பேருடன் தூத்துக்குடி துறைமுகம் வந்த கப்பலுக்கு மத்திய அரசின் எச்சரிக்கையையும் மீறி அதிகாரிகள் அனுமதியளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 'கோவிட் - 19' பாதிப்பு காரணமாக, சீனாவில் இருந்து வரும் சுற்றுலா பயணியருக்கு இந்தியாவில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சீனர்கள் 14 பேருடன் பனாமா சரக்கு கப்பல் 'ரூயி' தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திற்குள் அனுமதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு உலகத்தையே மிரளச்செய்துள்ளது. எனவே இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகள் பல்வேறு தடுப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. குறிப்பாக சீனாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியில்லை.

சீனாவிற்கு சென்று திரும்பும் இந்தியர்களை தனிமைப்படுத்தி வைரஸ் பாதிப்பு உள்ளதா என சில தினங்கள் ஆய்வுக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். இந்த சூழலில் சீனர்கள் 14 பேர்களை கொண்ட பனாமா நாட்டின் கொடியுடன் கூடிய சரக்கு கப்பல் ‛ரூயி' தற்போது துாத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திற்குள் அனுமதிக்கப்பட்டுள்ளது. கப்பலில் வந்தவர்களுக்கு 'கோவிட் - 19' சோதனை செய்யப்பட்டதா? கப்பலில் வந்த சீனர்கள் வெளியே சென்றுள்ளார்களா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. 

தலைப்புச்செய்திகள்