Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தியாகிகளின் குடும்பத்தினரைச் சந்தித்து சிஆர்பிஎப் அதிகாரிகள் குறைகளைக் கேட்டறிந்தனர்

பிப்ரவரி 16, 2020 08:15

சென்னை: நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த தியாகிகளின் வீடுகளுக்குச் சென்று குறைகள் கேட்டறிந்து புது நடவடிக்கையை சிஆர்பிஃப் அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். மத்திய ரிசர்வ் போலீஸ் படைப்பிரிவினர் பணிகளின்போது உயிர்த் தியாகம் செய்த தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களின் குடும்பத்தினரை சிஆர்பிஎப் அதிகாரிகள் நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தனர்.

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக ஆவடியில் உள்ள சிஆர்பிஎப் மைய அதிகாரிகள் சேலம், கோயம்புத்தூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த ஒரு மாத காலமாகப் பயணம் மேற்கொண்டனர். 

சிஆர்பிஎப் தியாகிகளின் குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்ததோடு, தியாகிகளின் குடும்பத்தினருக்கு மத்திய அரசின் நிவாரணத் திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது என அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர். சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் உயிர்த் தியாகம் செய்த வீரர்கள் கல்வி கற்ற பள்ளிகளுக்குச் சென்று அவர்களைப் பற்றிய பாராட்டு பட்டயங்களைப் பதித்தனர். 

சிஆர்பிஎப் தியாகிகளை நினைவுபடுத்தும் விதமாக புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிர்நீத்த சிஆர்பிஎப் தியாகிகளுக்கு ஆவடி தலைமையகத்தில் மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நினைவு அஞ்சலிக் கூட்டத்தில் கடந்த ஐந்தாண்டுகளில் உயிர்த்தியாகம் செய்த வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

புல்வாமா தாக்குதல் சம்பவத்தில் உயிர்நீத்த வீரர்கள் சிவச்சந்தின் மற்றும் ஜி சுப்பிரமணியன் ஆகியோரின் மனைவிகள் இந்த ஆண்டு நடைபெற்ற 71ஆவது குடியரசு தின விழாவின்போது மூத்த அதிகாரிகள், சிஆர்பிஎப் வீரர்கள் முன்னிலையில் புதுப்பிக்கப்பட்ட இணைக் கட்டுப்பாட்டு அறையைத் திறந்து வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்புச்செய்திகள்