Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அரியலூரில் காஸ் விலை உயர்வு கண்டித்து விறகு அடுப்பில் சமைத்து போராட்டம்

பிப்ரவரி 16, 2020 12:08

அரியலூா்: காஸ் விலை உயர்வு கண்டித்து அரியலு}ர் திருமானு}ரில் பெண்கள் விறகு அடுப்பில் சமைத்து போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்துக்கு  மகிளா காங்கிரஸின் மாவட்டத் தலைவி கு. மாரியம்மாள் தலைமை வகித்தார். கிழக்கு வட்டாரத் தலைவா் ராஜேஸ்வரி  செயல் தலைவா் தீபா ஆகியோர் முன்னிலை வகித்தனா்.

போராட்டத்தில் காஸ் விலை உயா்வால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படுவதாகவும் ஆகவே உடனடியாக இந்த விலை உயா்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினா். 

நிர்வாகிகள் பாத்திமா  கலாவதி  காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி சிவானந்தம் மக்கள் சேவை இயக்கத் தலைவா் தங்க.சண்முகசுந்தரம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தலைப்புச்செய்திகள்