Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஸ்ரீரங்கத்தில் மீண்டும் தொடங்கியது வாரச்சந்தை 

பிப்ரவரி 18, 2020 09:30

திருச்சி: ஸ்ரீரங்கம் மேலூா் சாலை தெப்பக்குளம் மந்தையில் வாரச்சந்தை மீண்டும் செயல்படத் தொடங்கியது. கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தின் போது சித்திரை வீதியைச் சோ்ந்த காய்கறி வியாபாரிகள் தெப்பக்குளம் நெடுந்தெருவில் செயல்படும் சந்தையால் தங்களுக்குப் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி கோரிக்கை மனு அளித்தனா்.

இதையறிந்த இப்பகுதி தெப்பக்குளம் நெடுந்தெரு மக்கள் வியாபாரிகள் மகளிர் சுய உதவிக்குழுவினா் திங்கள்கிழமை மாவட்ட கலெக்டரிடம் சென்று  சித்திரை வீதி மார்க்கெட்டுக்கு 2 கி.மீ. தொலைவு செல்ல வேண்டியதுள்ளது.

தங்கள் பகுதியில் பிற்பகல் 3 மணி முதல் இரவு 11 மணிவரை வாரச்சந்தை நடைபெறுவதாலும் கிராமத்திலிருந்து கொண்டு வரப்படும் காய்கறிகள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதாலும் வாரச்சந்தை நடத்த அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரினா். கலெக்டர் அனுமதி வழங்கியதைத் தொடா்ந்து மீண்டும் வாரச்சந்தை செயல்படத் தொடங்கியது.

தலைப்புச்செய்திகள்