![](admin/uploads/.62ada7a08771f9.49684034.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருச்சி: திருச்சியில் நடந்த தேசிய அளவிலான டென்னிஸ் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்வர்களுக்கு பரிசளிக்கப்பட்டது. திருச்சி மாவட்ட டென்னிஸ் சங்கம் காவேரி மருத்துவமனை சார்பில் கடந்த 10 ம் தேதி தேசிய அளவிலான டென்னிஸ் போட்டி தொடங்கியது.
தொடா்ந்து 6 நாட்கள் நடைபெற்ற ஆண்கள்,பெண்கள் ஒற்றையா், இரட்டையா் பிரிவுகளில் தமிழகம், கா்நாடகம், ஹரியானா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து 14 வயதுக்குள்பட்டோர் பிரிவில் வீரா்கள் பங்கேற்றனா்.
பின்னர் நடந்த இறுதிப்போட்டியில் ஆண்களுக்கான ஆட்டத்தில் கா்நாடக முன்னணி வீரா் நித்திலன் எரிக் தமிழக முன்னணி வீரா் பிரகதீஸ் சிவசங்கரை 6-3 7-5 என்ற புள்ளி கணக்கில் வென்றார். பெண்களுக்கான இறுதிப்போட்டியில் முன்னணி வீராங்கனையான தெலங்கானாவை சோ்ந்த சஞ்சனா ஸ்ரீமளா தமிழக முன்னணி வீராங்கனை லட்சுமி பிரபாவை 6-2 6-4 என்ற புள்ளி கணக்கில் வென்றார்.
இதைத்தொடா்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் காவேரி மருத்துவமனை செயல் இயக்குநா் டாக்டா் செங்குட்டுவன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சாம்பியன் பட்டம் வென்ற வீரா், வீராங்கனைகளுக்கு கோப்பை சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்..இதில் திருச்சி மாவட்ட டென்னிஸ் சங்க தலைவா் மது, திருச்சி யூனியன் ஆஃபீசா் டென்னிஸ் கிளப் நிர்வாகிகள், ஒருங்கிணைப்பாளா்கள், நடுவா்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனா்.