Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோவையில் 4 பேர் திடீர் மாயம்

பிப்ரவரி 18, 2020 11:03

கோவை: கோவை வடமதுரை பகுதியை சேர்ந்தவர் நாராயணன். இவரது மகள் இந்துமதி(17). இவர் வட்ட மலை பாளையத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

சம்பவத்தன்று தனது உறவினருடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றவர், அங்கு தனது உறவினரிடம் அருகில் உள்ள கடைக்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்றார். ஆனால் வெகு நேரமாகியும் திரும்பி வரவில்லை. 

கோவை சின்ன தடாகத்தை சேர்ந்தவர் வேலுசாமி. இவரது மகள் சினேகா(14). சம்பவத்தன்று வேலுசாமி தனது மனைவியுடன் வேலைக்கு சென்று விட்டார். சினேகா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். வேலுசாமி மாலையில் வீட்டிற்கு வந்தபோது மகளை காணாமல் அதிர்ச்சியடைந்தார். 

அன்னூர் பகுதியை சேர்ந்தவர் சதாம் உசேன். இவரது மனைவி ரெகானா. இவர்களுக்கு 1 குழந்தை உள்ளது. சதாம் உசேன் அந்த பகுதியில் உள்ள பழக்கடையில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று சதாம்உசேன் வேலைக்கு சென்று விட்டார். இந்த நிலையில் சதாம் உசேனின் வீட்டில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டது. 

இதனால் சந்தேகம் அடைந்த சதாம் உசேனின் தங்கை இதுகுறித்து சதாம் உசேனுக்கு தகவல் கொடுத்தார்.உடனடியாக அவர் வீட்டில் வந்து பார்த்தார். அப்போது வீட்டில் குழந்தை மட்டும் இருந்தது. ரெகானாவை காணவில்லை. அக்கம் பக்கம் தேடியும் கிடைக்கவில்லை. 

கோவை கணியூர் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி ஜெயலட்சுமி(26). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று ஜெயலட்சுமி கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு வெளியில் சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சேகர் அருகில் உள்ள உறவினர் வீடுகளில் தேடி பார்த்தார். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. 

காணாமல் போனவர்களின் அந்தந்த காவல் எல்லைக்குட்பட்ட போலிசார் வழக்குப்பதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்