Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உலக திறனாய்வு கண்டறியும் திட்டத்தில் தடகள போட்டி

பிப்ரவரி 26, 2020 09:23

திருச்சி: சிறந்த விளையாட்டு வீரர்  வீராங்கனைகளை இளம் வயதிலேயே தேர்வு செய்யும் பொருட்டு உலக திறனாய்வு கண்டறியும் திட்டம் என்ற பெயரில் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. 

பள்ளிகளில் 6  7  8-ம் வகுப்புகளில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு 100 மீட்டர் இ 200 மீட்டர்  400 மீட்டர் ஓட்டப்பந்தயம்   நீளம்  உயரம் தாண்டுதல்  குண்டு எறிதல் ஆகிய தடகள போட்டிகள் தமிழகம் முழுவதும் கல்வி மாவட்டங்கள் வாரியாக நடத்தப்பட்டு வருகிறது. 

திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் திருச்சி கல்வி மாவட்ட அளவில் உள்ள மாணவர்கள் பங்கேற்ற தடகள போட்டிகள் நடந்தன. இதில் ஒவ்வொரு போட்டியிலும் முதல் 2 இடங்களை பெற்ற மாணவ-மாணவிகள் மண்டல அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். இதே போல் லால்குடி  முசிறி மணப்பாறை கல்வி மாவட்ட அளவிலும் தடகள போட்டிகள் நடத்தப்பட்டன.

தலைப்புச்செய்திகள்