Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருநங்கையர்கள் விருதுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

பிப்ரவரி 28, 2020 07:24

திருச்சி: திருநங்கையர்கள் விருதுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும் என்று திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து  திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மூன்றாம் பாலினர்கள் (திருநங்கையர்) இச்சமூகத்தில் சந்திக்கும் எதிர்ப்புகளை மீறி தங்களுடைய சொந்த முயற்சியில் படித்து தனித் திறமைகளை கொண்டு பல்வேறு துறைகளில் முன்னேறியுள்ளனர்.

திருநங்கையர் அவ்வாறு முன்னேறி இச்சமுதாயத்தில் சமநிலை அடைந்துள்ளதே அவர்கள் படைத்த சாதனையாகும். அவ்வாறு சாதனை படைத்த மூன்றாம் பாலினத்தினரை கவுரவிக்கும் வகையிலும் மற்ற மூன்றாம் பாலினத்தவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் திருநங்கையர் தினம் என அறிவிக்கப்பட்ட ஏப்ரல் 15-ந் தேதியன்று மூன்றாம் பாலினருக்கான முன்மாதிரி விருது வழங்கப்படும். 

இவ்விருதானது ரூ.1 லட்சம் காசோலை மற்றும் சான்று உள்ளடக்கியதாக உள்ளது. எனவே மூன்றாம் பாலினர்கள் அரசு உதவி பெறாமல் தானாக சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருப்பவராகவும் குறைந்தது 5 மூன்றாம் பாலினருக்காவது அவர்கள் வாழ்க்கையில் முன்னேற உதவியராகவும் மூன்றாம் பாலினர் நல வாரியத்தில் உறுப்பினராக இருக்கக்கூடாது என்ற விதிமுறைகளை கொண்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. விண்ணப்பங்கள் வந்து சேர இன்று (சனிக்கிழமை) கடைசி நாள் ஆகும். இவ்வாறு திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்