Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க அரசு பரிசீலனை

மார்ச் 07, 2020 09:38

நாகை: மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிப்பது குறித்து அரசு பரிசீலனை செய்து வருவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

நாகை மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது,  நாகை மாவட்டத்தில் இருந்து பிரித்து மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த கோரிக்கையை துரிதமாக பரிசீலித்து, மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க அரசு நடவடிக்கை எடுக்கும். 

காவிரி-கோதாவரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்த அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது எனக்க் கூறினார்.

தலைப்புச்செய்திகள்