Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முன்னாள் அமைச்சர் அமமுகவில் இருந்து விலகல்

மார்ச் 07, 2019 11:12

சென்னை: முன்னாள் அமைச்சர் தாமோதரன் அமமுகவில் இருந்து விலகி மீண்டும் அதிமுகவில் இணைந்தார். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சசிகலாவிற்கு எதிராக ஓ.பி.எஸ் திடீரென போர்க்கொடி தூக்கினார். இதனால், கோவை மாவட்டம் கிணத்துக்கிடவு பகுதியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் தாமோதரன், ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்து அவருடன் இணைந்தார். பின்னர், சசிகலா சிறைசென்ற பிறகு ஓ.பி.எஸ் மற்றும் எடப்பாடி ஆகியோர் ஒன்றாக இணைந்தனர். இதனால், உரிய முக்கியத்துவம் தரப்படாததால் டிடிவி.தினகரனின் அமமுகவிற்கு சென்றார்.  

இந்தநிலையில், நேற்று அமமுகவில் இருந்து விலகி முதல்வர் எடப்பாடி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்து மீண்டும் அதிமுகவில் இணைந்தார். பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அனைவரும் மீண்டும் அதிமுகவிற்கு திரும்ப வேண்டும். தங்களின் தாய் வீட்டிற்கு திரும்பி மீண்டும் நல்ல முறையில் பணியாற்றி ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு கூறினார். 

 

தலைப்புச்செய்திகள்