Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருச்சி ஆவின் சேர்மன்  மீண்டும் பதவியேற்பு!

மார்ச் 09, 2020 04:40

திருச்சி: திருச்சி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் தலைவராக பேட்டியின்றி தேர்வான, கார்த்திகேயன் மீண்டும் தலைவராக  பொறுப்பேற்றுக்கொண்டார். 

தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையம் மூலம், 14 மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியங்களுக்கு (ஆவின்) தேர்தல் அறிவிக்கப்பட்டது. திருச்சி, கரூர், மதுரை, தேனி, விழுப்புரம், கடலூர், ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், கோயமுத்தூர் உள்ளிட்ட 14 ஒன்றியங்களில், 17 உறுப்பினர்கள் உள்ளிட்ட தலைவர், துணைத்தலைவர் தேர்ந்தெடுப்பதற்கான தேர்வு நடைபெற்றது. 

அந்தந்த ஒன்றியங்களில் பால்வளத் துறை துணைப் பதிவாளர் தேர்தல் அலுவலராக நியமிக்கப்பட்டிருந்தனர். திருச்சியைப் பொறுத்தவரையில்,
திருச்சி ஆவின் சேர்மன் பதவிக்கு, திருச்சி, முசிறி, மணப்பாறை, துறையூர், பெரம்பலூர், வேப்பந்தட்டை, அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய ஒன்பது தொகுதிகளில் இருந்து, 17 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதில், ஆவின் தலைவராக கார்த்திகேயன், மீண்டும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். துணைத் தலைவராக அரியலூர் பிச்சை முத்து தேர்வு செய்யப்பட்டார்.

\திருச்சி ஆவின் அலுவலகத்தில் கையெழுத்திட்டு பதவி ஏற்றுக் கொண்டவர்களுக்கு அ.தி.மு.க.வினர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். திருச்சியை பொறுத்தவரை, அ.தி.மு.க. மாணவரணி மாவட்டச் செயலாளரான கார்த்திகேயன், மீண்டும் ஆவின் தலைவர் பதவியை தக்கவைத்துக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தலைப்புச்செய்திகள்