Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திமுக தெற்கு மாவட்ட அலுவலகம் கே.என்.நேரு திறப்பு

மார்ச் 14, 2020 07:41

திருச்சி: திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தை முதன்மைச் செயலர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.

திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி நியமிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து திருச்சி தெற்கு மாவட்ட புதிய அலுவலகம் கலைஞர் அறிவாலயம் அருகில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அலுவலகத்தை திமுக முதன்மை செயலர் கே.என்.நேரு திறந்து வைத்தார். 

தொடர்ந்து குத்துவிளக்கு ஏற்றிய அவர் அங்குள்ள திமுக மூத்த தலைவர்களின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். 
பின்னர் வருகைப்பதிவேட்டில் தனது கருத்தை பதிவு செய்து கையொப்பமிட்டார். இது குறித்து செய்தியாளர்களிடம் கே.என்.நேரு பேசுகையில்,
ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டம் சிறப்பாக செயல்படுவதற்காக மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 

தற்போது திருச்சி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளார். அவருக்கு அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும். நானும் எனது ஒத்துழைப்பை சிறப்பாக செய்வேன் என்று அவர் கூறினார்.

விழாவில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பில் பெரியசாமி கே.என். சேகரன்  பரணிகுமார் ராணி  மாநகரச் செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்