Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மணலூர்பேட்டை நூலக வாசகர் சந்திப்பு: மாணவர்களுக்கு பரிசு

மார்ச் 16, 2020 03:01

திருக்கோவிலூர்: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவலூர் வட்டம் மணலூர்பேட்டை கிளை நூலகத்தில் வாசகர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
மாணவர்களுக்கு பரிசளிப்பு மற்றும் வாசிப்பின் பயன் குறித்து கலந்துரையாடல் நிகழ்வு நடந்தது. 

இந்நிகழ்ச்சிக்கு வாசகர் வட்டக் குழுத் தலைவர் ஐயாக்கண்ணு தலைமை தாங்கினார். நூலகக் கொடையாளர் பணிநிறைவு பெற்ற ராணுவ வீரர் கல்யாணகுமார், தலைமையாசிரியர் லில்லி ஏஞ்சல்,  பணிநிறைவு பெற்ற ஆசிரியர் நடராஜன், சேகர்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

‘பண்பாடும், பொன்மொழிகளும்’எனும் தலைப்பில் பணிநிறைவு பெற்ற தலைமையாசிரியர் தியாகராஜன் சிறப்புரையாற்றினார். பள்ளி மாணவர்கள் ரூபன்குமார், மருதமலை உள்பட பலர் பல்வேறு தலைப்புகளில் பேசினர். பண்பாடும் பொன்மொழிகளும் தலைப்பில் பங்கேற்று பேசிய மாணவர்களுக்கு நல் நூலகர் அன்பழகன் பரிசு வழங்கி  பாராட்டினார்.

ஓய்வு பெற்ற அரசு பணியாளர்  ராமலிங்கம், சிவராமன், கூட்டுறவு சங்கத் துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் திருமலை, வாசகர்கள் வெங்கடேசன், பாலாஜி, விக்னேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் வினோத்குமார் நன்றி கூறினார்.

தலைப்புச்செய்திகள்